tamilnadu

img

கோவை மத்திய சிறை : கைதிகளுக்கு கஞ்சா விநியோகம்

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்வதாக சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் இரு நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள், சிம் கார்டுகள் போன்றவை கைதிகளிடம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அங்கு சிறைக்காவலராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறை கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்வதாக மேற்கண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளர், சிறைக்காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

;