tamilnadu

கோவை : கொரோனாவுக்கு 28 வயது இளைஞர் பலி

கோவை, ஜூன் 15- கோவையில் கொரோனா பாதிப்புக்கு 28 வயது இளை ஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தை சேர்ந்த  28 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி யாற்றி வந்துள்ளார். பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது. இதனால் அருகி லுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் துள்ளார். காய்ச்சல் குறையாததால் ஞாயிறன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இங்கு இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோத னையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட் டது. இதனைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பல னின்றி ஞாயிறன்று இரவு இளைஞர் உயிரிழந்தார். கோவை யில் கொரோனாவுக்கு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட் டுள்ளது. கொரோனா பாதிப்பால் முதியவர்கள் மட்டுமே பலியாகி வருகின்றனர் என்று சுகாதாரத் துறையினர் தெரி வித்து வரும் நிலையில் கோவையில் 28 வயது இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;