tamilnadu

கோவை, சென்னை முக்கிய செய்திகள்

போலி இணையதளம் அதிமுக முன்னாள் எம்.பி. கைது
கோவை,ஜன.25- அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்த தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி யை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த முன் னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும், அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டவருமான கே.சி. பழனிசாமி, www.admk.org.in என்ற பெய ரில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகி யோரின் உருவ படத்துடன் இரட்டை சிலை சின்னத்துடன் போலி இணையதளம் நடத்தி வரு வதாக சூலூர் காவல்நிலையத் தில் முத்துகவுண்டன் புதூர் ஊரா ட்சி மன்ற தலைவர் கந்தவேல் புகார் அளித்தார். இந்த புகா ரின்பேரில் சனிக்கிழமையன்று அதிகாலையில் கோவையிலுள்ள கே.சி. பழனிசாமி வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இவர் மீது 10 பிரிவு களின் கீழும், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

24 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
சென்னை, ஜன.25- தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடி யரசுத் தலைவர் பதக்கங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்த காவல்துறை யினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இதில், தமிழகத்தில் சிலைத் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலை வரின் சிறப்புப் பதக்கங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகர காவல் ஆணை யர் செந்தில்குமார் உள்ளிட்ட 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த பதக்கம் அறி விக்கப்பட்டுள்ளது.