திருப்பூர், ஜூலை 11 – அவிநாசி ஒன்றியம் திருமலைக்கவுண்டன்பாளை யம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடு மைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஓராண் டாக நீதி வழங்கப்படாததற்கு தீண்டாமைக்கு எதி ரான கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதனன்று மாலை தீண்டாமைக்கு எதிரான கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச. நந்த கோபால், மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.பழனிச் சாமி, அவினாசி ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வர மூர்த்தி, பொருளாளர் முருகன், விசிக ஒன்றியச் செய லாளர் ஆலத்தூர் மாரிச்சாமி, த.பெ.தி.க. திருப்பூர் மாநகரச் செயலாளர் சண்.முத்துக்குமார், ஆதித் தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர் வேந்தன் மகேஷ், மாநில துணைச் செயலாளர் விடுதலைச் செல்வன், தமிழ்ச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அகத்தி யன், தலித் விடுதலைக் கட்சி தலைமை நிலையச் செய லாளர் மூர்த்தி, காட்டாறு இதழ் குழு செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக பணி யமர்த்தப்பட்ட பாப்பாள் மீது, உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் சிலர், சத்துணவு சமைக்கக் கூடாது என்று அரசு அலுவலர்களை நிர்ப்பந்தப் படுத்தி தீண்டாமைக் கொடுமை நிகழ்த்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரி யாரிய அமைப்புகளின் போராட்டத்தால் அவர்கள் மீது, பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் ஓராண்டு காலத்தை காவல்துறை எடுத்துக் கொண்டது. அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பரமசாமி இவ்வழக் கின் விசாரணை அலுவலராக இருந்தால், பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என ஏற்கனவே கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தியும் அக்கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது ஓராண்டுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மட்டு மின்றி, பல்வேறு வழக்குகளிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டித்து ஜூலை 19ஆம் தேதி வெள்ளி யன்று மாலை 5 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலு வலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடத்திட தீண்டா மைக்கு எதிரான கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.