tamilnadu

img

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒகேனக்கலில் தூய்மைப் பணி

பென்னாகரம், பிப்.25- பென்னாகரம் ஊராட்சி  ஒன்றியத்தின் சார்பில் ஒகேனக்கலில் தூய்மைப் பணி செவ்வாயன்று நடை பெற்றது.  தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தல மாகும். இங்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும்  தமிழகத்தின் பிற மாவட்டங் களில் இருந்து தினந் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும், காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள், ஈமச்சடங்கு போன்றவை செய்து தாங்கள் அணிந்து வரும் ஆடைகளை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் தண்ணீர் மாசு படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், செவ்வாயன்று பென்னா கரம் ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணன் மேற்பார்வையில் கூத்தப்பாடி, செங்கனூர், சத்தியநாதபுரம், கலப்பம்பாடி, பருவதன அள்ளி, தித்தியோப்பன அள்ளி  உட்பட 19 பஞ்சாயத்துக்களில் இருந்து  தூய்மைப் பணி காவலர்கள் வரவழைக்கப் பட்டு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் முன்னிலையில் தூய்மைப் பணி மேற்கொள் ளப்பட்டது. காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பழைய துணிகள் மற்றும் குப்பைகள்  அள்ளப்பட்டு டிராக்டர் மூலம் அப்புறப் படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அற்புதம் அன்பு, ஒன்றியக் கவுன் சிலர்கள் கெம்புராஜ், செல்வம், சக்கரவேல், குமரேசன், கூத்தப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கர், வனக்குழுத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.