சேலம், மே 14- கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு சங்கத்தின் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் உதயகுமார், சண் முகம், சேகர், பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஆட்டோ தொழிலாளர்கள் 90 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோல் மேட்டூர் பகுதி யில் தூய்மை பணியாளர்களுக்கு சிஐடியு மற்றும் மாதர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கருப்பண்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.