tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சி பணியாளர்களுக்கு சம்பள ரசீது வழங்க சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 18- திருப்பூர் மாநகராட்சியில் இணைக் கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட குடிநீர் பணியா ளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சம்பள ரசீது வழங்குவதுடன், இபிஎப் பிடித் தம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ்  தலைமையில் தொழி லாளர்கள், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாரிடம் புத னன்று இது குறித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுக ளைக் கொண்டது. திருப்பூர் மாநக ராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது, இணைக்கப்பட்ட 8 ஊராட்சி கள் மற்றும் நல்லூர், 15 வேலம்பாளை யம் ஆகிய இரு நகராட்சிகளில் பணி யாற்றும் 150-க்கும் மேற்பட்ட குடி நீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் களுக்கு கடந்த பிப். மாதம் 2019ஆம் ஆண்டு முதல் அரசாணையின் படி, குறைந்தபட்ச ஊதியம் வழக்கப்படுகி றது. ஆனால், அதற்குரிய சம்பள ரசீது வழங்குவதில்லை.  அதேபோல் இபிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதியும் பிடித்தம் செய்வதில்லை. இதுதொடர்பாக சம் பந்தபட்ட அதிகாரிகளிடம் 6 மாதங் களுக்கு முன்பு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே  இதுதொடர்பாக நடவடிக்கை மேற் கொண்டு, குடிநீர் பணியாளர்களுக்கு  மாதந்தோறும் சம்பளத்துடன் சம்பள ரசீதும், அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியையும் பிடித்த செய்ய வேண்டும் என்றனர்.