tamilnadu

img

தீபாவளி போனசை விரைந்து வழங்கிடுக தொழிலாளர் நலத்துறை தலையிடக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 17– அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும், இதனை உத்தரவாதப்படுத்த தொழிலாளர் நலத்துறை தலையிடக்கோரியும் கோவையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் உட னடியாக தொழிலாளர்களுக்கு  அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள் போனஸ் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று சிஐடியு தொழிற் சங்கத்தின் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மூத்த தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.   அப்போது, கோவையில் ஏரா ளமான சிறிய,பெரிய பஞ்சாலை கள், இன்ஜினியரிங், கட்டு மானம், விசைத்தறி, தேயிலை தோட்டங்கள் மற்றும் போக்கு வரத்து, மின்சாரம், குடிநீர், சிவில் சப்ளையர் கார்ப்பரேசன், ஆவின், டாஸ்மாக், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு துறை நிறுவனங் கள், தனியார் நிறுவனங்கள்,  வணிக நிறுவனங்களில் லட்சக் கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய தொழி லாளர்களுக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் தொகை ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.  இத்தகைய சூழலில் தற்போது வரை போனஸ் குறித்த பேச்சு வார்த்தைகளைக்கூட பெரும் பாலான நிறுவனங்கள் துவங்காத நிலை உள்ளது. ஆகவே, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலை யில் உடனடியாக அரசு மற்றும்  தனியார் நிறுவனங்கள் போனசை வழங்க வேண்டும். இதுதொடர் பாக தொழிலாளர்நலத்துறை உடனடியாக தலையீடு செய்து  தொழிலாளர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய  வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் கட்டிடம் கட்டும் தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் கே.மனோகரன், தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச்செய லாளர் பி.சந்திரன், ஹோட்டல் சங்க செயலாளர் ஏ.எல்.ராஜா, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலாளர் கே. ரத்தினகுமார், அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வேளாங்கண்ணிராஜ், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி. துரைசாமி, சுமைப்பணி தொழி லாளர் சங்கம் எம்.ராதாகிருஷ் ணன், ஏபிடி சங்க பொதுச்செய லாளர் அருணாச்சலம், பஞ்சாலை சங்க தலைவர் பிரான்சிஸ் சேவி யர் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று கொட்டும் மழையையும் பாராமல் கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.