திருப்பூர், ஜூன் 30 – காங்கேயம் தாலுகா முத்தூர் கரட்டுப்பாளை யத்தில் குழந்தைகளுக்கான ஆளுமைத்திறன் பயில ரங்கம் நடைபெற்றது. சனியன்று நடைபெற்ற இப்பயிலரங்கில் “கதை கதையாம்” “குழந்தைகள் மன உலகம்” “தம்பியரே தங்கையரே” என்ற கருப் பொருள்களில், குழந்தை களுக்கான, ஆளுமைத் திறனை வளர்த்தெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிலரங்கை, கலை இலக்கிய வடிவில், காங்கேயம் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தண்ணீர் சேமிப் பையும், தமிழக சுற்றுச் சுற்றுச்சூழல் நிலை மையையும் விளக்கி, பெருந்துறை யோகா ஆசிரியர் நல்லசிவம் பள்ளி மாணாக்கர் களுக்கு கோலாட்ட நிகழ்வை பயிற்று வித்தார். குழந்தைகள் மன உலகம் குறித்த கலந்துரையாடலை காங்கேயம் வாலிபர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். உடல் மனம் உறுதி செய்யும் இருக்கைப் பயிற்சிகளை, ஈரோடு யோகா ஆசிரியர் ஜெகநாதன் அறிமுகம் செய்தார். “கவிதை பழகு” தலைப்பில் குறும்பட இயக்குநர் காங்கேயம் கதிர்வேல் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு தமுஎகச காங்கேயம் கிளைச் செயலாளர் காளியப்பன் தலைமை ஏற்றார். நாடக ஆசிரியர் பாக்கியதாசன் முன்னிலை வகித் தார். பெற்றோர்கள், சுப்பிரமணியம், மற்றும் ஆசிரியை பாரதிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.