கோவை, ஆக. 18- கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை மற் றும் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கிய இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் பணிக்கு செல்லும் காரணத்தால் தன் குழந்தையை பார்த்து கொள்ள வீட்டின் அருகில் வசிக்கும் தேவி என்ற பெண்ம ணியை வேலைக்கு அமர்த்தி அவருக்கு மாதம் சம்பளம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி யன்று குழந்தையின் உடலிaல் சிறு, சிறு காயங்கள் இருந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, குழந்தையை பரி சோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தேவியுடைய கணவர் ராமுவின் நண்பர் சக்திவேல் என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கோவை இராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கன கராஜ் (70) என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறு மியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இராமநாதபுரம் காவல் நிலைத் தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கனகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.