திருப்பூர், பிப். 26 - மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வ தேச யோகா போட்டியில் பங்கேற்க சென்னி மலை கொங்கு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் தகுதி பெற்றார். ஈரோட்டில் உள்ள நந்தா சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சென்னை ஆல் இண்டியா கல்சுரல் சொசைட்டியினர் நடத்தினர். இப்போட்டி யில் 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிக ளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் யோகா வீரர்கள், வீராங் கனைகள் முறையே முன்னோக்கி வளை தல், பின்நோக்கி வளைதல், திருகுநிலை நிற்றல், கை, கால் ஆதாரத்தில் நிலை நிற் றல், தோள், தலை ஆதாரத்தில் நிலை நிற்றல் என்ற சர்வதேச யோகா பாடத்திட்ட அடிப் படையில் தங்கள் யோகாத் திறமைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். இதில் சென்னிமலை கொங்கு இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் பவித்ரன், குக னேஷ், கவி அஷ்மிதா, சுபாஷ் பரணி ஆகி யோர் கலந்து கொண்டு தங்கள் யோகாத் திறமைகளை பதிவு செய்ததில் பவித்ரன் முதலிடம், குகனேஷ் இரண்டாமிடம், கவி அஷ்மிதா, சுபாஷ் பரணி மூன்றாம் இடத்தி லும் வெற்றி பெற்றனர். பவித்ரன் சேம்பி யன் ஆப் சேம்பியன் போட்டியில் முதலி டத்தைப் பெற்று மே மாதம் மலேசியாவில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த யோகா ஆசிரியர் காளியப் பன், விஷ்வநாதன் ஆகியோரை தலைவர் கந்தசாமி, தாளாளர் சுப்பிரமணி, பொருளா ளர் மணி, முதல்வர் ஜோதிமுருகன் ஆகி யோர் பாராட்டினர்.