tamilnadu

img

சமையல் தொழிலாளியின் மகள் மருத்துவராகும் வாய்ப்பு

நாமக்கல், ஜூலை 18- நாமக்கல்லைச் சேர்ந்த சமையல் தொழிலாளியின் மகள் அரசு  மருத்துவக் கல் லூரியில் இடம் கிடைத் துள்ள நிலையில், கல்வி கட்டண செலுத்துவதற்கு உதவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட் டியை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி துரைசாமி. இவரது மனைவி ஜீவா விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவரது மூத்த மகள் கமலிகாளப்பநாயக் கன்பட்டி அரசு பள்ளியில் படித்து பனி ரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,120  மதிப்பெண்களும் பெற்றதுடன், மருத்துவ  சேர்க்கைக்கான நீட் தேர்வில் 385 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.  இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில்  நடைபெற்ற மருத்துவ கலந் தாய்வில் பங்கேற்ற மாணவி கமலிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால், சேர்க்கை கட்டணம், தேர் வுக் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம் உள்ளிட்டவை கள் தேவைப்படும் சூழ் நிலையில் இவற்றை செலுத்த முடியாமல் எனது குடும்பம் மிகவும் வறுமையில் சிக்கியுள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மருத்துவ படிப்பு  தொடர தேவையான  உதவிகளை செய்து தரும்படி மாணவி கமலி  நாமக்கல் மாவட்ட ஆட் சியர் மு.ஆசியா மரியத்திடம்  மனு அளித் தார்.