உடுமலை, ஆக. 19- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எதிப்பு கருத்தரங்கம் தமிழ்நாடு கல்வி இயக்கம் சார் பாக ஞாயிறன்று உடுமலை ஜாமிஆ பள்ளிவாசல் (பழைய சன் அரங்கம்) கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கருந்தரங்கத்தில் ஆசிரி யர் செல்லத்துரை எழுதிய ‘’ கல்விக் குள் நுழையும் மனு தர்மம்’’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் புதிய கல்விக்கொள்கை திரும்பப்பெறு, மாநில அரசிற்கே கல்வி அதிகாரம் என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் சுந்தரவள்ளி, மத்திய மோடி அரசின் புதிய கல்வி கொள்கை என்பது மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த குலக்கல் வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. மேலும் கட்டாயமாக மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாய இந்தி திணிப்பு நடவடிக்கை. எனவே இந்த கல்விகொள்கையை அனைத்து முற் போக்கு சிந்தையாளர்களும் எதிர்க்க வேண்டும் என்று பேசி னார். முன்னதாக இக்கருத்தரங் கிற்கு ஆசிரியர் செல்லதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் அப்துல் கய்யம் அனைவரையும் வரவேற்று பேசி னார். தமிழ்நாடு கல்வி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப் புரவாளன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மது சூதனண், தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கா.சு.நாகராசன், திரா விட முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளர் மத்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை மணி, கல்வி மேம்பாட்டு இயக் கத்தின் மூர்த்தி, தமிழ்நாடு கல்வி இயக்கத்தின் அருட்செல்வன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.