tamilnadu

img

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் திருக்குறள் கல்வி மாநில சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோவை, அக்.21- மகாத்மா காந்தியடிகளின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு “இணைந்தே உயர்வோம், மகாத்மாவின் வழியில்” என்ற மையக் கருத்தின் அடிப்படையில் மாநில அள விலான சி.பி.எஸ்.இ. பள்ளி முதல் வர்கள் மாநாடு ‘கொங்கு சகோ தயா’ மற்றும் ‘கோயம்புத்தூர் சகோ தயா’ பள்ளி முதல்வர்கள் கூட்ட மைப்பு சார்பாக கோவை ஜென்னிஸ் ரெசிடென்சி அரங்கத்தில் அண்மை யில் நடைபெற்றது. கோயம்புத்தூர் சகோதயா தலை வர் .நவமணி மற்றும் கொங்கு சகோ தயா தலைவர் முனைவர்.ராமசுப்பிர மணியன் தலைமை வகித்தனர். சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் சங்கம் (சி.எஸ்.எம்.ஏ) தலைவர் மனோகர் முன்னிலை வகித்தார். சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் கே.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.  இம்மாநாட்டில், மகாத்மா காந்தி யடிகள் போற்றிய திருக்குறள் என்ற தலைப்பில் சிறப்பு அமர்வை தொடர்ந்து, தமிழக சி.பி.எஸ்.இ. பள்ளி களில் உயர்நிலை மேல்நிலை வகுப்பு களில் பொது பாடத்திட்டத்தில் திருக் குறள் கல்வியை செயல்படுத்துவது; நவம்பர் மாதம் புதுதில்லியில் நடை பெறும் சகோதயா தேசிய மாநாட்டில் தமிழகத்தில் இருந்து அதிக எண் ணிக்கையில் முதல்வர்கள் கலந்து கொள்வது; திருக்குறள் பாடத்திட் டத்தை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பொது பாடத்திட்டத்தில் நடைமுறைப் படுத்த செயலாக்க திட்ட வல்லுநர் கூட்டு குழு ஒன்றை அமைப்பது, “அன்புள்ள மகாத்மாவுக்கு .... எனக்கு பிடித்த திருக்குறள்” என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்துவது, உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கொங்கு மற்றும் கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்பின் சார்பில் கீதா லக்ஷ்மணன், சுப்புலட்சுமி, மார்டின், ஜெயலதா, அனுராதா, சுகுணாதேவி, தாமோதரன், ஹேமலதா, அய்யப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.  பின்னர் காந்திய வழியில் ரகு பதி ராகவா, வைஷ்ணவ ஜனதோ உள்ளிட்ட தேச பக்தி பாடல்கள் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரும்பாலான சி.பி. எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கதராடையில் நெய்த வேஷ்டி சேலை அணிந்து கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழகம் முழு வதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.