tamilnadu

img

சாதி சான்றிதழ் வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள்: பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு

உடுமலை, ஜூன் 19- காட்டு நாயக்கன் என்ற  பெயரில் சாதி சான்று வழங்கக்கோரி அந்த  சமூகத்தை சேர்ந்த மக்கள் ஜமாபந்தியில் மனு அளித்தனர். உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வரு கிறது. உடுமலை வட்டம்  எலையமுத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட பார்த்த சாரதிபுரம் கிராமத்தில் சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சாதியை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு தற்போது சாதி சான்றிதழ் வழங்குவது இல்லை. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவருக்கும் காட்டுநாயக்கன் என்ற சாதி சான்று வருவாய்த்துறையினர் வழங்கி வந்தனர். தற்போது வழங்க மறுப் பதால் குழந்தைகளின் மேற்படிப்பு கேள்விக் குறியாக உள்ளது.  மேலும் பள்ளி சான்றிதழ்களில் சாதி  பெயர் குறிப்பிடாமல் உள்ளதால் இவர் களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் மற்றும் குழந்தைகளின் படிப்பு கேள்வி குறியாக உள்ளது. ஏற்கனவே வழங்கிவந்த காட்டுநாயக்கன் பெயரில் சாதி சான்று வழங்க உடனடியாக  வருவாய்த்துறை அதி காரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என மனு அளித்து உள்ளனர்.