ஈரோடு, செப்.8- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனுக்கு வழங்கியுள்ள தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 13 ஆவது மாநாடு ஈரோடு ஆர்.எம்.எஸ். அரங்கத்தில் செப். 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ப.மூர்த்தி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ரமேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாநில துணைத்தலைவர் மு.சுப்பிர மணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாநில பொருளாளர் எம்.தங்கராஜ் நிறைவுரையாற்றினார். மாவட்ட செயலா ளர் கே.வெங்கிடு அறிக்கையை முன் வைத்து பேசினார். இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.உஷாராணி, மாவட்ட துணைத்தலைவர் வி.சுந்தரலிங் கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், அரசு ஊழியர் சங்கத் தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணி பணி ஓய்வு நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும். தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்ப பெற வேண் டும். சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப் பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்த அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ரயில்வே, நெடுஞ்சாலைதுறை, பிஎஸ்என்எல், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். ஜேக்டோ ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர், ஆசிரி யர்கள் மீது போடப்பட்ட 17பி உத்தரவு களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக ஜெ.பாஸ்கர்பாபு, செய லாளராக கே.வெங்கிடு, பொருளாளராக வி.உஷாராணி உள்ளிட்டோர் புதிய நிர் வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.