tamilnadu

img

மாநிலத் தலைவர் பணி நீக்கத்தை ரத்து செய்க

கிருஷ்ணகிரி, செப். 10- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 6 வது மாநாடு கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலை வர் ஹரிராவ் வரவேற்றார். மாநில பொதுச்  செயலாளர் அன்பரசு துவக்க உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் நடராஜன் வேலை  அறிக்கை வாசித்தார். தோழமை சங்க தலை வர்கள் பிரதாப், சரவணன், விஜயகுமார், சிங்காரவேலு, முருகன், கோவிந்தம்மாள், சின்னப்பன், சப்த மோகன், தமிழரசி, கல்யாண சுந்தரம், வெங்கடாஜலபதி, சிஐடியு மாவட்டத்  தலைவர் நஞ்சுண்டன், மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். துணை தலைவர்  கள் கிருஷ்ணன், தேன்மொழி, இணைச் செய லாளர்கள் பெருமாள், கருப்பசாமி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். தமிழகத்தில் ரயில் நிலையம் இல்லாத மாவட்டத் தலை நகரம் கிருஷ்ணகிரி என்ப தால் ஓசூர், கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை பாதை திட்டத்தை மத்திய-மாநில அரசுகள்  உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் சுகாதார மான கழிவறைகள், ஓய்வறைகள் அமைத்து கொடுக்க வேண்டும். அங்கன்வாடி, சத்து ணவு, மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரி வோரை  நிரந்தரம் செய்ய வேண்டும், பணி  ஓய்வு தினத்தில் பழிவாங்கும் நோக்கில் பணி  இடை நீக்கம் செய்யப்பட்ட தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிர மணியின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து  செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவராக சந்திரன், செய லாளராக சு.நடராஜன், பொருளாளராக ஏ. தேவராஜ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பழி வாங்கப்பட்டு மீண்டும்  பணியமர்த்தப்பபட்ட சின்னசாமி, இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக மூன்று நாட்கள் சிறையில் வைக்கப்பட்ட மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் இளவரசன் ஆகியோர் இம் மாநாட்டில்  கவுரவிக்கப்பட்டனர். காந்தி சிலையிலிருந்து துவங்கிய மாநாட்டு ஊர்வலத்தை பிஎஸ்என்எல் ஊழி யர்கள் சங்க மாநில உதவிச் செயலாளர் பாபு  துவக்கி வைத்தார். நிறைவாக நடந்த பொது மாநாட்டில் மாநில துணைத் தலைவர் பார்த்தி பன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்  செயலாளர் ஜெயலஷ்மி, மாநில செயற்குழு  உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.