tamilnadu

img

அரசாணை 17பி-யை ரத்து செய்திடுக ஜாக்டோ-ஜியோ ஆவேசம்

உதகை, செப்.13 - அரசாணை 17பி -யை ரத்து செய்ய  வேண்டுமென ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று உதகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்களை சீரழிக்கும் அரசாணை 145, 100,101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பணி நீக்கங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்க நிலை மற்றும் இடை நிலை ஆசிரியர்களை பணிமாறுதல் செய் வதை தடுக்க வேண்டும். தேசிய புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்திட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் வெள்ளியன்று பல் வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை தாங்கி னார். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஏ.ஆர்.ஆஜரா கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.