tamilnadu

அவிநாசியில் வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி, ஜூன் 2- அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் திங்களன்று இரவு தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டு உறுப்பினராக இருந்தவர் செல்வராஜ்(52). இவர் தனது குடும்பத்துடன் குளத்துப் பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருகிறார். பனி யன் நிறுவன ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் திங்களன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ யிடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரித்து வரு கின்றனர்.