tamilnadu

img

ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.11- மாத ஊதியத்தை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும்  2020ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்கவேண்டும்.  ஒவ் வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும்.ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த  அமைப்புகளுக்கு செலுத்தவேண்டும்.  பிஎஸ்என்எல் 4ஜிசேவைகளை உடனடி யாக துவங்கவேண்டும்.பிஎஸ்என்எல் கடன் பத்திரங்களை வெளியிட அரசின்  உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும். எப்ஏ 17(ஏ)ன் கீழ் வழங்கப் பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப  பெற வேண்டும்.விருப்ப ஓய்வு  அமலாக் கப்பட்டதன் காரணமாக, ஊழியர்களை தன் இஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது.   ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில்  உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பிஎஸ்என்எல்இயூ மாவட்டத் தலைவர்  டி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன்,என்எப்டிஇ மாவட்டசெயலாளர் பி.மணி, ஏஐபிஎஸ் என்எல்இஏ மாவட்டசெயலாளர் ஆர்.ராம சுந்திரம், எஸ்என்இஏ மாவட்டசெய லாளர் ஆர்.பாலமுரளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிஎஸ்என்எல்இயூ மாவட்ட உதவிசெய லாளர் ஏ.பழனி நன்றி கூறினார். 

;