tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி உண்ணாவிரதம்

தருமபுரி, ஜூலை 2- ஒப்பந்த தொழிலாளருக்கு மாதச்சம்பளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் உண் ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 314 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.  இந்த போராட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் டி.பாஸ் கரன் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பருதிவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநில உதவி செயலாளர் எம்.பாபு, மாவட்ட செயலாளர்  பி.கிருஷ் ணன், மாவட்ட பொருளாளர் என். ரமேஷ், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பி.ஸ்ரீ்ரீதரன், மாவட்ட செயலாளர் எம்.செளந்தரராஜன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஜோதி நன்றி கூறினார்.

;