tamilnadu

img

கனமழையின் காரணமாக அக்கரைப்பட்டி ஏரி உடைப்பு

நாமக்கல், செப். 26- திருச்செங்கோடு வட்டம், அக்கரைப்பட்டி,  வெண்ணந் தூர் பகுதியில் உள்ள ஏரியின் கரை உடைந்து விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் பெரும் சேதம் ஏற் பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து  வரும் கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அக்கரைப் பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஏரியின்  பக்கவாட்டில் உள்ள கரை உடைந்து தண்ணீர் வெளி யேறியது. மேலும் அக்கரைப்பட்டி, சௌரிபாளையம் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் உடைந்தது.இதனால் அந்தப் பகுதியில் உள்ள 50 ஏக்கருக்கும் மேற் பட்ட விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதமாகி உள்ளது. மேலும், சௌரிபாளையம், ஆத்துமேடு, அக்கரைப்பட்டி, ஓலைப்பட்டி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.