புளியம்பட்டி, டிச.12- மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த தினம் புதனன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் புளி யம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் பாரதியாரின் கவிதை களை கூறி உறுதி மொழி ஏற்றனர். ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள சொல வனூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியார் வேடமணிந்தபடி அவரின் கவிதை வரிகளான அச்சம் தவிர், ரெளத்திரம் பழகு, செய்வது துணிந்து செய் உள்பட பல்வேறு கவிதை வரிகளை ஆசிரியர்கள் வாசிக்க மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது பள்ளி ஆசி ரியர்கள் பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டி தேசப்பற்று குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்து ரைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மேரி, விடியல் அறக்கட்டளை செயலாளர் எஸ். ஜெயகாந் தன், ஆசிரியர் லோகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.