பெரும் விபத்து தவிர்ப்பு
தருமபுரி, நவ.10- தருமபுரி மாரண்ட அள்ளி அருகே ஞாயிறன்று காலை பெங்களூரு-காரைக் கால் பாசஞ்சர் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக் கியது. லோகோ பைலட் டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்ப் பட்டு பயணிகள் உயிர் தப்பினர். பெங்களூரில் இருந்து சேலம் வழியே காரைக் காலுக்கு தினந்தோறும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி ஞாயிறன்று காலை 6 மணிக்கு பெங்களூரில் இருந்து காரைக்கால் பாசஞ்சர் ரயில் புறப்பட்டது. காலை 9.45 மணியளவில் ராயக் கோட்டைக்கும் மாரண்டஅள்ளிக்கும் இடையில் இருக்கும் காடுசெட்டிபட்டி என்னும் இடத்தில் ரயில் வந்து கொண்டி ருந்தது. வளைவு பகுதியை ரயில் கடந்த போது, திடீரென ரயில் இன்ஜினின் ஒரு சக்கரம் மட்டும் தடம் புரண்டு, தரையில் இறங்கியது. இந்நிலையில் அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தினார். வளைவு என்பதால், மெதுவாக சென்ற நிலையில் ரயில் நின்றது. இதனால், இன்ஜினுக்கு அடுத்துள்ள பயணிகள் பெட்டிகள் கவிழவில்லை. இதன் காரணமாக ரயிலில் பயணித்த பயணிகள், விபத்திலிருந்து தப்பினர். ரயில் நின்றதையடுத்து, லோகோ பைலட் மற்றும் கார்டு கீழே இறங்கி பார்த் தனர். உடனடியாக இன்ஜினின் ஒரு சக்கரம் மட்டும் தடம்புரண்டு இருப்பது பற்றி பெங்களூரு கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக ரயில், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. விபத்து பற்றி பெங்களூரு கோட்ட அதிகாரிகள் மற்றும் ஆர்பிஎப் காவலர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவம் ரயில் பயணி களிடமும், அப்பகுதி மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.