சாக்கடை, வீதி விளக்கு பராமரிப்புப் பணி மும்முரம்
திருப்பூர், ஜன. 29 - திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதியில் அடிப் படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனுக் கொடுத்ததன் தொடர்ச்சி யாக அப்பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்மாவதிபுரம், ஜீவா காலனி மற்றும் அங்கேரிபாளையம் சாலை ஜீவா காலனி சந்திப்பில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். சாக்கடைகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இப் பகுதியில் தனியாகச் செல்லும் பெண் களிடம் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர் கதையான நிலையில் அதைத் தடுக்கக் காவல் துறை பாதுகாப்புப் பணி களைப் பலப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தின் பத்மாவதிபுரம் கிளை சார்பில் கடந்த வாரம் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்திலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்திலும் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி தெரு விளக்குப் பராமரிப்பு பிரிவு சார்பில் விளக்கு களைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் சமூக விரோத மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் துறையினர் தற்போது தினமும் இரவில் மூன்று முறை ரோந்துப் பணிக்கு வரு கின்றனர். அத்துடன் இப்பகுதிகளில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இது தவிர பழுதடைந்த சாலைகளைச் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித் திருப்பதாகவும் மாதர் சங்கத்தினர் தெரிவித் தனர். அத்துடன் மாதர் சங்க முறையீட்டின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற் கொண்ட காவல் துறை மற்றும்,மாநக ராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்ப தாக பத்மாவதிபுரம் கிளை நிர்வாகிகள் தெய் வானை, லலிதா ஆகியோர் கூறினர்.