tamilnadu

img

வங்கி கடன்: கால அவகாசம் வழங்குமாறு புகைப்பட கலைஞர்கள் மனு

சேலம், மார்ச் 20- வங்கி கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு சேலம்  மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கோரிக்கை மனு அளித்தனர்.  அம்மனுவில் கூறியிருப்ப தாவது, தமிழக அரசு கொரோனா  வைரஸ் தொற்று பராவமால் தடுக்கும் நோக்கில் மார்ச் 16ஆம்  தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி  வரை பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித் துள்ளது.மேலும்,பொது நிகழ்ச்சிகள், சுபநிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில், புகைப்பட கலைஞர்கள் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவ னங்களில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். இந்த தடை  உத்தரவு நடவடிக்கையால் வரு வாய் இன்றி சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். எனவே, வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு இரு மாதங்கள் அவகாசம் அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர்.