கோவை, ஜூலை 8- வேளாண்மை பல்லைக்கழக இளநிலை மற்றும் பட்ட யப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இள நிலை படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவினர் எனப்படும் முன் னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியினர், தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்முறை படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக் கான கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். வெளி நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவன உபய தாரர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 6ஆம் தேதி நடை பெறும். இணையதளம் வாயிலாக மட்டும் நடத்தப்படும் பொது கலந்தாய்வு ஜூலை 12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் கல்லூரி வாரியான பாடப்பிரிவு ஒதுக் கீடுக்கான கலந்தாய்வு ஜூலை 19 ஆம் தேதியும், அதற் கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 23,24,25 ஆம் தேதிகளில் நடைபெறும். முதல்கட்ட விருப்ப அடிப்படை யிலான நகர்வு முறைக்கான இருக்கை ஒதுக்கீடு ஜூலை 29லும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 1,2 ஆம் தேதி களில் நடைபெறும். இரண்டாம்கட்ட விருப்ப அடிப்படை யிலான நகர்வு முறையில் கல்லூரி வாரியான பாடப்பிரிவு ஒதுக்கீடு ஆகஸ்டு 5ஆம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும். இப்பணிகள் முடிந்து ஆகஸ்டு 21ஆம் தேதி கல்லூரி தொடங்கும். மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதி சேர்க்கை முடி யும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டய படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 28 முதல் 30ஆம் வரை நடைபெறும். சம்பந்தப் பட்ட நிறுவனங்களில் செப்டம்பர் 5ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் நேரில் ஆஜராக வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் கலந்து கொண்டவர்கள் செப்டம்பர் செப்.16 அல்லது அதற்கு முன்னர் நேரில் ஆஜராக வேண்டும். பட்டயப்படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங் கும் நாள் செப்.16 என கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.