tamilnadu

img

தேச ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக அய்யாவழி பாலமுருகன் கைது

கோவை, மார்ச் 10 -  தேச ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக அய்யா வழி தர்ம யுக பேரவை தலைவர் அய்யா வழி பாலமுருகன் கைது செய்யப்பட் டுள்ளார். கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதி யில் கடந்த பிப்ரவரி 22 ம் தேதி செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக் கங்கள் சார்பில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி  ஆகிய சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி தர்ம  யுக பேரவை தலைவர் அய்யாவழி பாலமு ருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அரசாங்கம் மற்றும் காவல் துறை  அதிகாரிகளுக்கு எதிராகவும், தேச ஒற்று மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி யதாக அய்யாவழி பாலமுருகன் மீது  செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில், கோவை சிங்காநல் லூர் பேருந்து நிலையத்தில் வைத்து அய்யா வழி பாலமுருகனை செல்வபுரம் காவல்  துறையினர் கைது செய்தனர். இதைய டுத்து அய்யாவழி பாலமுருகன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

;