tamilnadu

img

அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு விருது

தருமபுரி, ஆக.20- தருமபுரி மாவட்டத்தில் அரசு திட்டப்  பணிகளை சிறந்த முறையில் செயல்படுத்தி யதற்காக அரூர் ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில்  விருதுகள் வழங்கப்பட்டன.  தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிகழாண்டில் (2019) அரசு  திட்டப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட  அனைத்து நலத் திட்டப் பணிகளையும்  அரூர் ஊராட்சியில் சிறந்த முறையில்  செயல்படுத்தியது. இதற்காக அரூர்  ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும்  அரசு அலுவலர்கள் சுதந்திர தினத்தன்று  விருது பெறுவதற்காக தேர்வு செய்யப் பட்டனர்.  இதையடுத்து  அரூர் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் ஆர்.ஆறுமுகம், பெ. செந்தில்குமார், உதவிப் பொறியாளர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.கே.சண்முகம்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.கோபிநாத், கே. மணி, இளையராஜா, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் கே. காளிதாசன், டி.செல்லன், பி. சக்திவேல், எஸ். அபுல்கலாம் அசாத், பணி மேற்பார்வையாளர்கள் எ.அன்புராஜ், என்.புனிதா, ஆர்.அன்பழகன், சாலை ஆய்வாளர்கள் எஸ்.முருகன், பி.வடிவேல், எஸ்.இளவரசன் ஆகியோருக்கு தரும புரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர  தினத்தன்று நடைபெற்ற விழாவில் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் களை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வழங்கினார்.