tamilnadu

அவிநாசி மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை 

அவிநாசி, அக்.29- அவிநாசி பகுதியில்  செவ்வாயன்று அதிகாலை  முதலே  மிதமான மழை பெய்தது. அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளான தண்டுக் காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், வடுக பாளையம், ஆலத்தூர், பொங்கலூர், தத்தனூர், குட்டகம், புலிப்பார், போத்தம்பாளையம், பாப்பாங் குளம், மங்கரசு வலையபாளையம், கருவலூர், உப்பிலிபாளையம், ராமநாதபுரம் உட்பட பல கிராம  பகுதிகளில்  செவ்வாயன்று அதிகாலை  முதல்   மழை பெய்தது வருகின்றது. இதனால் சில இடங் களில் சாலையில் மழைநீர் தேக்கம் காரணமாக சாலையோர வியாபாரிகள், பள்ளிக் குழந்தைகள், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளிட்ட  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

 அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

தருமபுரி, அக்.29- மொரப்பூர் அருகே உள்ள அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த பாப்பி ரெட்டிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர் களுக்கு போதியளவில் வகுப்பறைகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு  ரூ. 1.65 கோடி மதிப்பில், இரண்டு மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடத்திற்கு பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது.  இந்நிலையில், வனப்பகுதியில் புதிதாக கட்டப் பட்ட பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் விஷ  பூச்சிகள் தொல்லை மற்றும் கால்நடைகள் பள்ளி வளா கத்தில் உலா வருகின்றன. எனவே, பள்ளிக்கு சுற்றுச் சுவர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நவ.1 ல் பொன் மஞ்சள் கருத்தரங்கம்

ஈரோடு, அக்.29- ஈரோட்டில் பொன் மஞ்சள் கருத்தரங்கு வரும் நவம்பா் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முருகேசன் கூறியதாவது, ஈரோடு திண்டல் வேளாளா் மகளிர் கல்லூரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ)  சார்பில் பொன் மஞ்சள் கருத்தரங்கம் நவம்பா் 1, 2ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்கில் மஞ்சளுக்கு அதிக விலை, அதிக லாபம் தரும் ஏற்று மதிக்கான மஞ்சளை உற்பத்தி செய்தல், விற்ப னைக்கான நுணுக்கம், தரம் பிரித்தல் ஆகியவை குறித்து நிபுணா்கள் விளக்க உரையாற்றுகின்றனர். இதுதவிர ஏற்றுமதியாளா்களுடன் வியாபார கலந்துரையாடல், இயற்கை முறையில் குறைந்த செலவில் மஞ்சள் உற்பத்தி நுணுக்கங்கள், நீா் மேலாண்மை மற்றும் களை கட்டுப்பாடு யுக்திகள் அதிக விலையளிக்கும் நாம் சந்தையின் லாபங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

  விதையின் தரம்:  பரிசோதனை அவசியம்

விதை பரிசோதனை அலுவலர் தகவல்

கோவை, அக்.29- விளைச்சலை பெருக்க விதை பரிசோதனை அவசியம் என விதை பரிசோதனை அலுவலர் தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து கோவை விதை பரிசோதனை அலுவலர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாயத் தொழில் மேன்மேலும் செழித்து வளர விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் மற்றும் லாபம் ஈட்டினால் மட்டுமே முடியும்.  விதை தரம் என்பது  விதையின் முளைப்புத் திறன் புறத்தூய்மை, ஈரப் பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.   பயிர் எண்ணிக்கையை  பராமரித்தால் மட்டுமே அதிக  மகசூல் அடையலாம். அதற்கு தரமான விதைகளை விதைத்தால் மட்டுமே பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும்.   வயலில் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க குறைந்தபட்ச முளைப்புத் திறனுக்கு குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்.  குறைந்த பட்ச முளைப்புத் திறனாக நெல்லுக்கு 80 சதவிகிதம்,  மக்காச்சோளத்துக்கு 90 சதவிகிதம், பயறு வகை களுக்கு 75 சதவிகிதம், எண்ணெய் வித்து பயிர் களுக்கு 70 சதவிகிதம், காய்கறி பயிர்களுக்கு 60 முதல் 70 சதவிகிதமாக இருக்கும்.  எனவே விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவ சாயிகள் தங்களின் விதைகளின் முளைப்புத் திறனை  தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.  இதற்காக கோவை தடாகம் ரோட்டில் உள்ள விதை  பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.30  என்ற கட்டணத்தில் விதை பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது.  அதற்கான முடிவுகளை அதிக பட்சம் 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சான்று விதை மாதிரிகள் ஆய்வாளர் விதை  மாதிரிகள் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள்  அறிவிக்கப்படுகிறது.   இந்தியாவிலேயே முதன் முதலாக ISTA    அங்கீ காரம் பெற்ற அரசு சார்ந்த முதல் விதை பரிசோதனை  நிலையம் கோவை என்பதால் BIC மற்றும் OIC  சான்று விதை பரிசோதனை செய்து கொடுக்கப் படுகிறது.  இதனால் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் விநியோகிப்பாளர்கள் ஆகியோர் விதைகள் ஏற்று மதி - இறக்குமதி செய்வதற்கும் மேலும் தொழிலில் வளர்ச்சி பெறுவதற்கும் ஒரு முன்னோடியாக திகழ் கிறது.  மேலும் விபரங்களுக்கு விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம் 1424 ஏ  தடாகம் ரோடு, கோவை என்ற முகவரிக்கு  0422-2981530 எனும் தொலைபேசி தொடர்பு கொள் ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அரசு மருத்துவர்கள் 5ஆம் நாளாக வேலைநிறுத்தம்  

தருமபுரி, அக்.29- தருமபுரி மாவட்டத்தில் மருத்து வர்கள் 5ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பட்ட மேற் படிப்பில் இட ஒதுக்கீடு, நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத் துவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தருமபுரி மாவட் டத்தில் மருத்துவர் 5ஆம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட் டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னா கரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை, பாலக்கோடு, அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய வட்டார தலைமை மருத்துவமனைகள் மற்றும் 51 அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணியாற்றும் மருத்து வர்கள் சுமார் 90 சதவிகிதம் பேர் பங் கேற்றனர். இருப்பினும், முக்கிய  அறுவை சிகிச்சைகள், தீவிர  காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோர்  மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில்  உள்ள நோயாளிகள் உள்ளிட் டோருக்கு மருத்துவர்கள் வருகை பதி வேட்டில் கையெழுத்திடாமல் சிகிச்சையளித்தனர். அதேபோல், புற நோயாளிகளுக்கு பயிற்சி மருத்து வர்கள் சிகிச்சை அளித்தனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு குறைதீர் கூட்டம்

திருப்பூர், அக்.29- திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழனன்று (அக்.31) நடை பெற உள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்களால் பயன் பெற வேண்டி திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் தலைமையில் வரும் அக்.31ஆம் தேதி குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. தேசிய அடை யாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு  பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.