tamilnadu

img

திருமுருகன்பூண்டி முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி

அவிநாசி, நவ. 30- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி கோவி லில் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி நடை பெற்றது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பகுதி யில் திருமுருகநாதசுவாமி கோயில் உள்ளது. இது திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோவிலின் அருகிலேயே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனியன்று அதிகாலை கோவிலின் பின்பக்க சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த மர்ம  நபர்கள் அங்கிருந்த அன்னதான உண்டியலை கடப்பாரை யால் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள் ளனர். இதனையறிந்த இரவு பாதுகாவலர்  சத்த மிட்டுள்ளார். இதனால் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் உண்டி யல் பணம் தப்பியது. கொள்ளை முயற்சி குறித்து பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.