tamilnadu

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

கோவை, மார்ச் 5-  கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்கு தல் நடத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல் பட்டு வருகிறார். இவர் புதனன்று கோவை காந்திபுரம் பகுதியில் நடை பெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார். கோவை  ராமநாதபுரத்தை அடுத்த நஞ்சுண்டா புரம் அருகே சென்றபோது, அங்கு உள்ள ஒரு பாலத்தின் கீழ் இருசக்கர  வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.  இதனையடுத்து உடனடியாக அவருடைய நண்பர் ஹரி என்பவரை தொடர்பு கொண்டு வரவழைத்து, ஆட் டோவில் கோவை அரசு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அங்கு அவ ருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகி றது. இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட னர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்படவே, அசம் பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் அங்கு குவிக்கப் பட்டனர்.  இதற்கிடையே, காயமடைந்த ஆனந்த், மேல் சிகிச்சைக்காக கோவை  அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்து முன்னணி நிர்வாகி தாக்கப் பட்ட சம்பவத்தை கண்டித்து வெள்ளி யன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அவ்வமைப்பு அழைப்பு விடுத் துள்ளது.