கைது செய்ய வலியுறுத்தி மாதர், மாணவர் சங்கத்தினர் புகார்
கோவை, பிப். 11 – மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உதவி போக்சோ சட்டத்தில் கைது செய் யக்கோரி மாதர், மாணவர் சங்கங் கள் செவ்வாயன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம், கிணத் துக்கடவு தாலுகாவிற்குட்பட்ட அரசு துவக்கப் பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணிபுரிப வர் மாகாளியப்பன் ஆறுமுகம். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து வந்துள்ளார். இந்நிலை யில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பல மாணவிகளிடம் தவ றாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாண விகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திங்க ளன்று பாதிக்கப்பட்ட மாணவி களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட உதவி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன், உடல் நிலை சரியில்லை எனக்கூறி தலை மறைவாகியுள்ளார். இதன்பிறகு நிலைமை விபரீதமாவதையறிந்து நெகமம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாணவியின் உறவினர்கள் திங்களன்று இரவு காட்டம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஆசிரியர் மாகாளியப்பன் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை தொலை பேசியில் அழைத்து, தெரியாமல் நடந்துவிட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படி கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வளைத்த ளத்தில் பரவியது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாணவியின் தாயார் கூறுகையில், ஆசிரியர், திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்பதி லேயே குற்றத்தை ஒப்புக்கொண் டது உறுதியாகியுள்ளது. இவர் குற்றம் செய்தது உறுதியாக் கப்பட்ட நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக் காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இத்தகவல் குறித்து அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தி னர் செவ்வாயன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதுகுறித்து மாதர், மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஆசிரியர் மீது பெற்றோர்கள் யாரும் புகாரளிக்காததால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வில்லை என்கின்றனர். ஆனால், இத்தகவல் தெரிந்தவுடன் காவல் துறையினர் உடனடியாக குழந் தைகள் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறைக்கு தகவல் அளித்து இருக்க வேண்டும். அவர் கள் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளித்திருக்க வேண் டும். மாறாக, காவல் துறையினர் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி ஆசிரி யருக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என எழுதி வாங்கியுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளியாக உள்ள உதவி தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததாக தெரிவித்தனர். மேலும், உடனடியாக குழந் தைகள் நல ஆணையம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இப்பி ரச்சனையில் தலையிட்டு அப்பள் ளிக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். பெற்றோர்கள் புகார் அளித்தால்தான் நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல. மாதர், மாணவர் சங்கத்தின் புகாரை பெற்றும் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலை யிட வேண்டும் என தெரிவித்த னர். முன்னதாக, இந்த புகார் மனு வினை மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநி லக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜ லட்சுமி, சுதா, வனஜா நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாண வர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட ஏராளமான மாண வர்களும் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.