கோவை, மார்ச். 12 – கோவையின் அமைதி நடவடிக்கை காரணமாக முன்னெச்சரிக்கையாக கோவையில் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வியாழனன்று செய்தியா ளர்களிடம் தெரிவித்துள் ளார். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறுகையில், கோவையில் கடந்த ஒரு வாரமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப் பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்குக ளில் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுக்கத்தக்க வகையில் பேசிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க ஆத்துபாலம் ஷாகின் பாக் போராட்டம் நிறுத்திவைத்துள்ளனர். இரவு நேரங்களில் 40 இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி கோவையில் முகாமிட் டுள்ளார். பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள், கோவையில் பதட்டமான சூழல் நிலவுகை யில் இந்து முன்னணி அமைப்பினருக்கு காந்திபுரம் பகுதியில் தொடர் போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதித்தீர்கள் என்கிற முதல் கேள்வியை எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பாராத காவல் ஆணையர் உடனே அனைவருக்கும் நன்றி என கூறி விட்டு இருக்கையை விட்டு எழுந்து சென்று விட்டார். ஒரு கேள்விக்கே பதில் சொல்லா மல் தான் சொல்ல வந்ததை மட்டும் சொல்லி விட்டு செல்வதற்கு செய்தியாளர் சந்திப்பு தேவையில்லையே, செய்தி குறிப்பு அனுப்பினால் மட்டும் போதுமே என இதர காவல் அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பின் போது சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உடனிருந்தார்.