tamilnadu

img

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்திடுக

சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - கைது

சேலம், நவ. 4-  திருவள்ளுவர் சிலையை அவமதித்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர்  சிலையை அவமதித்த நபர்களை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்றோர் திருவள் ளுர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரியும், திட்டமிட்டு வன் முறையை தூண்டி வரும் பாஜக உள்ளிட்ட  இந்துத்துவ அமைப்பினர் மீது நடவடிக்கை  எடுக்காத தமிழக அரசை கண்டித்தும்  ஆவேச முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாரதி, மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இக் போராட்டம் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;