கோவை, அக்.6- ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகைகள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பல்வேறு பொருட் களையும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் பூக்களால் அலங்கரித்து வழிபடுவது வழக் கம். இதேபோல், வெவ்வேறு தொழில்துறையினரும் தங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் தொழில் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி எந்திரங்களை பூக்களால் அலங்கரித்து வழிபடுவர். இதேபோல், விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப் பதும், மாணவர்கள் தங்களது புத்த கங்கள் உள்ளிட்ட கல்வி உபகர ணங்களை வணங்குவதும் வழக் கம். கடந்த மூன்று நாட்களாகவே இந்த பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை பொது மக்கள் வாங்கிய வண்ணம் இருந் தனர். ஆயுதபூஜையை முன்னிட்டு கோவை மார்க்கெட்டுகளில் மக் கள் கூட்டம் காணப்பட்டது. ஞாயி றன்று காலை முதலே பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசல் அதி கரித்தது. தொடர்ந்து, அந்த பகுதி யில் காவல்துறையினர் போக்கு வரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளி லும் மக்கள் கூட்டம் அலைமோதி யது. பூக்கள் விலை வழக்கத்தை விட விலை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து இருந்தது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய் யப்பட்ட செவ்வந்தி பூ ரூ.220 முதல் ரூ.300 வரையும், கிலோ ரூ.500 முதல் ரூ.600க்கு விற்பனையான மல்லிகை ரூ.800 முதல் ரூ.1,200 வரையும் விற்பனையானது. இதேபோல், மற்ற பூக்களின் விலையும் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து காணப்பட்டது, அரளி கிலோ ரூ.350க்கும், ரோஜா கிலோ ரூ.250க்கும், சம்மங்கி ரூ.200க்கும், சாமிப்பூ (ஒரு முழம்) ரூ.30க்கும் விற்பனையானது. வாழைக்கன்று (2க்கு) ரூ.100 முதல் ரூ.120க்கும், கரும்பு ஜோடி ரூ.100க்கும் விற்பனையானது.