tamilnadu

img

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

உடுமலை, ஜுன் 3-எர்ணாகுளத்தில் நடந்த தேசிய அளவிலான  சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற உடுமலை மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் (4 குயின் இன்டர் நேஷனல் ரேட்டிங் செஸ்  டோரமெண்ட்) தேசிய அளவிலான பொதுப் பிரிவினர்க்கான சதுரங்கபோட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. இதில் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் பயிற்சியாளர் ரவி ராஜகோபால் இலவசமாக நடத்தும் இலவச சதுரங்க பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற அஸ்வின் மற்றும் ஆர். பி.கவின் ஆகியோர் காசட் போட்டியில்ஆரம்ப சிறப்பு ஆட்டக்காரருகான விருதை பெற்றனர். இதேபோல், பயிற்சியாளர் ரவி ராஜகோபால் பொதுப் பிரிவுமற்றும் சீனியர் சிட்டிசன் பிரிவிலும் வெற்றி பெற்றார். மேலும்,  நூலகத்தில் பயிற்சி பெற்ற முகமதுசோகில், வி..ஜி.கமலேஷ் ஸ்ரீராம் ஆகியோரும் சிறப்பிடம் பிடித்தனர்.இவர்களுக்கான பாராட்டு விழா உடுமலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி.அய்யப்பன், கண்டிமுத்து, வேல்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற சதுரங்க பயிற்சியாளர் ரவி ராஜகோபால் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர், உடுமலை செஸ்கிளப் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.