tamilnadu

img

அன்னூர்: தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

அன்னூர், மார்ச் 18- தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி ஒப்படைப்பு நிகழ்வு புத னன்று அன்னூரில் நடைபெற்றது. அன்னூர் ஒன்றிய பகுதியில் கடந்த  இரண்டு மாத காலமாக 15 நாட்களுக்கு ஒரு முறை தீக்கதிர் சிறப்பு விற்பனை இயக்கம் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தீக்கதிர்  சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற் றது. இதில் அன்னூர் ஒன்றிய பகுதி யில் முதல்கட்டமாக சேகரிக்கப்பட்ட 48 சந்தாக்களுக்கான தொகை ஒப் படைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வளர்ச்சி நிதியாக பொதுமக்களி டம் சேகரிக்கப்பட்ட ரூ.60 ஆயிரத்தை ஒப்படைக்கும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ், கோவை மாவட் டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் பங்கேற்று சந்தா  மற்றும் வளர்ச்சி நிதியை பெற்றுக் கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலை வர் எஸ்.மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அகமது கபீர், மகேந்தி ரன், சுகுமார், சத்யராஜ், மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீக்கதிர் சிறப்பு விற் பனை இயக்கத்தில் பங்காற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள், வாலிபர் சங்க உறுப்பினர்கள்  ஆகியோர்களுக்கு கதர் ஆடை அணி வித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது.