திருப்பூர், ஜூலை 15- அங்கன்வாடி திட்டத்தை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கண் டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன் வாடி மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி திட்டத்தை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். மத்திய அரசு வழங்கும் ஊதிய உயர்வை தமிழக அரசு உடனடியாக நிலுவையுடன் வழங்க வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப் புகளுக்கு அங்கன்வாடி ஊழியருக்கு மாண்டிச்சேரி பயிற்சி கொடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். பிற துறை பணிகளை அங்கன்வாடி ஊழியர்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருப்பூர் நகர ஒன்றிய தலைவர் என். சுசீலா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி டி.சித்ரா பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்ட பொருளாளர் டி.குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மைதிலி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி கனகராஜ், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் எம். பாக்கியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், சா.ரஹ்மத்துன்னிசா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜெ.மெரூன்னிஷா, எம்.ஜூலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.