தஞ்சாவூர், ஆக.7 – ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவனை மீண்டும் பெற்றோர்களுடன் ஒப்ப டைப்பதற்காக, சிறுவனின் அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள் என குழந் தைகள் நலக் குழுவை சேர்ந் தவர்கள் கேட்டுக் கொண் டனர். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த வர் பரமேஸ்வரி (29). இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் யாசகம் எடுத்து வந்துள்ளார். கடைசியாக கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்து கொண்டிருந்த போது அவ ரிடம் நான்கு குழந்தைகள் இருந்துள்ளன. இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் அவர்களை மீட்டு குழந்தைகள் நலக் குழு விடம் ஒப்படைத்தனர். பரமேஸ்வரி குழந்தைகளை கேட்டு வந்த போது உரிய ஆவணங்களை காட்டி விட்டு குழந்தைகளை அழைத்து செல்ல லாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் வரவே இல்லை. இத னையடுத்து அந்த குழந்தைகள் தஞ்சா வூர் என தெரிவித்ததையடுத்து, தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒப்படைத் துள்ளனர்.
அதன் பிறகு குழந்தைகள் நலக் குழு வின் தஞ்சை மாவட்ட தலைவர் திலகவதி குழந்தைகளிடம் விசாரித்த போது, அவர் கள் எந்த தகவலையும் சரியாக சொல்லவில்லை. சில நாள்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் நாங்க மதுரை என்றும், படித்த பள்ளி மற்றும் ஆசிரியரின் பெயரையும் கூறியுள்ளான். அவன் சொன்ன பள்ளியில் விசாரித்து, தந்தை கோச்ச டையனை வரவழைத்து, நான்கு குழந்தைகளையும் ஒப்படைத்தனர். அப்போது அவர் மூன்று குழந்தைகள் மட்டுமே என்னுடையது என தெரி வித்து அதற்கான ஆவணங்களைகாட்டி குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாளாக அநாதை யாக உள்ள தருண்(5) என்ற சிறுவனைப் பற்றி விபரம் தெரியவில்லை. இதுகுறித்து திலகவதி கூறுகையில், சிறுவன் தருணின் பெற்றோர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ‘அம்மா விடம் கொண்டு விடுங்க’ என அழுது கொண்டே இருக்கிறான். அவனிடம் ஊர் பெயர் கேட்டால், பொள்ளாச்சி என்றும், அப்பா பெயர் சுரேஷ், அம்மா பெயர் சித்ரா, தம்பி பெயர் ராகவா என்றும் கூறுகிறான். மற்ற விபரங்கள் அவனுக்கு தெரியவில்லை. எப்படி, எப்போது பரமேஸ்வரியிடம் மாட்டி னான் என்ற விபரமும் தெரியவில்லை. தருணின் பெற்றோரோ அல்லது அவனை பற்றி விபரம் அறிந்தவர்களோ யாராக இருந்தாலும் உடனே எங்களிடம் வந்து அவனை மீட்டு செல்லுங்கள் என்றார். தொடர்புக்கு திலகவதி: 98426 92223