திருப்பூர், ஜூன் 27- தமிழ் மொழி பிழையின்றி பேச, எழுத நடத்தப்பட்ட ஒரு நாள் சிறப்புப் பயிற்சியில் மாணாக்கர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இதில் 5ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி “விரலசைவு விளையாட்டு” எனும் எளிய முறையில் தமிழ்ப் பயிற்சி வழங்கினார். இவ் வகுப்பில் எழுத்துக்களின் வடிவம், சொல், நீட்டெ ழுத்துகள், துணை எழுத்துகள், கொம்பு எழுத்துகள், சுழி எழுத்துகள், ஒற்றெழுத்துகள் குறித்தும் இலக்கணம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர். தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கி ணைப்பாளர் யோகி செந்தில் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.