tamilnadu

img

அவிநாசியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம்

, அக்.2- அவிநாசியை அடுத்த சேவூர் அரசு  பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு புதனன்று நடை பெற்றது. சேவூர் அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 50 ஆண்டுகளாக சேவூர் காவல் நிலையம் அருகே இயங்கி வருகிறது. இப்பள்ளி 1999ஆம் ஆண்டு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. இந்நிலையில் 1997ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் சந்திப்பு நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமையாசிரியைகள் நல்ல தங்காள், லலிதா ஆகியோர் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், இரவு காவலர் ஆகி யோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டன. இவ்விழாவில்பேசிய ஆசிரி யர்கள், அன்றைய மாணவர்களின்  பணிவு, கீழ்ப்படிதல், கற்கும்திறன்,  ஆசிரியர்கள் மீது கொண்ட பற்று  போன்ற குணங்களை இன்றைய  மாணவர்களோடு ஒப்பிட்டு பேசிய  போது முன்னாள் மாணவர்கள் மனம் நெகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய் தனர். தங்களது வாழ்நாளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக ஆசிரி யர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.  முன்னதாக, முன்னாள் மாண வர்கள் சார்பாக பள்ளிக்கு நாற் காலிகள் வழங்கினர். வரும் காலங் களில் முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி பள்ளிக்கு தேவையானவற்றை செய்வதாக உறுதியளித்தனர். மேலும் இப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம்  இல்லாத நிலையை அரசின் கவனத் திற்கு கொண்டு சென்று விளையாட்டு மைதானம் பெற நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தனர். நிறைவாக மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப் பறைகளில் அமர்ந்து கண் கலங்கி  நினைவுகளை பகிர்ந்து கொண்டு  பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.