tamilnadu

img

சாதியைக் காப்பாற்றுவதாகவே எல்லா அரசுகளும் உள்ளன

திருப்பூர், ஆக. 1 – இந்தியாவில் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து சுதந் திரம் வாங்கிய பின்பு அமைந்த நவீன மக்களாட்சி வரை எல்லா  அரசுகளும் சாதியைக் காப்பாற்று வதற்கே எல்லா முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளன. ஆனால் எல்லா தளங்களிலும் சாதி குறித்து  அடிப்படையான விவாதம், கற் பித்தல் நடத்த வேண்டிய அவசி யம் உள்ளது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார். திருப்பூர் பத்மாவதிபுரத்தில் தனியார் அரங்கத்தில் சாதியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மாதர் சங்க செயலாளர் இ.வளர் மதி தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் வரவேற்றார். இந்த விவாதம் குறித்து  மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால் முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து சாதி குறித்த  உரையாடலைத் தொடக்கி வைத்து ச.தமிழ்ச்செல்வன் பேசு கையில்: பரிணாம வளர்ச்சியில் மனி தர்கள் உருவானார்கள் என்று  அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இது தானாக உரு வான வளர்ச்சி, வெளியில் இருந்து யாரும் படைக்கவில்லை. அதே சமயம் சாதி என்பது இயற்கையில் உருவானதல்ல. இந்தியாவில் மட்டும் சாதி இருக்கிறது. இன் றைக்கு ஒருவர் ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்றால், சில நூறு  ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது முன்னோர்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பதா கவும், சாதி காலப் போக்கில் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுகிறார் கள்.  வட இந்தியாவில் இருக்கும் நால் வர்ண வேறுபாடு என்பது தமிழகத்தில் இருந்ததில்லை. முன்பு மன்னர் ஆட்சிக் காலத்திலும், பின்னர் ஆங்கிலே யர்கள் காலத்திலும் அதற்குப் பிந்தைய நவீன அரசியல் இயக்கங்கள் உருவான பின்னும் சாதி ஒழிப்பு என்பது  முன்வைக் கப்படவில்லை. பிராமணர், பிரா மணர் அல்லாத அமைப்பு என உருவானது, ஆனால் சாதி அல் லாத அமைப்பாக உருவாக வில்லை. தலித் அல்லாத சாதிகள் கூட்டமைப்பு உருவாகும் அள வுக்கு நாம் தேங்கிப் போனோம். எல்லா அரசுகளும் சாதியைக் காப்பாற்றுவதாகவே உள்ளன.

சாதியைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்கும்போது அதை ஒழிப்பதற்கான எந்த முயற் சியையும் அரசுகள் முன்னெடுக்க வில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் சாதியை மேலும் மேலும் இறுக்க மாக்கும் நடைமுறை காரணமா கத்தான் சாதியை ஒழிக்க முடிய வில்லை. பொது சமூகத்தில், கல்வியில், கருத்தியலில் சாதி குறித்து அறிவியல்பூர்வமாக சிந்திக்கும் நிலை இல்லை. ஆனால் இது குறித்து அறிவியல்பூர்வ மாகப் பேச வேண்டியுள்ளது.  வகுப்பறையில் இருந்து கிளம்பும் அறிவியல் வெளிச்சம் பொது சமூகத்தில் பரவ வேண் டும். ஆனால் இங்கே பொது சமூ கத்தில் இருக்கும் இருள் வகுப் பறைகளை இருட்டாக்கி, எதிர் காலத்தையும் இருட்டாக்கிக் கொண்டிருக்கிறது. பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இது வேறெங்கும் நிகழாத சாதனை. ஆனால் இதே தமிழகத்தில்தான் சாதிய ஒடுக்குமுறையும், சாதி ஆணவக் கொலையும் அதிகமாக உள்ளது. சாதிக்கு எதிரான ஆய்வு,  கற்பித்தல் இங்கே நடக்கவில்லை. குடும்பம், கல்வி, மதம், ஊடகம், கலை, இலக்கியம் என மனித மனங்களை உருவாக்கும் பண் பாட்டு நிறுவனங்களில் சாதி குறித்த விவாதம், ஆய்வு நடக் கவே இல்லை. சாதியைப் பற்றி வெளிப்படை யாக தாக்குவது என்ற நிலை உள்ளது. ஆனால் மனதளவில் சாதியைத் தாக்கும் செயல் நடக்க வில்லை. சாதியும், மனமும் இங்கே பின்னிப் பிணைந்துதான் உள்ளது. பகுத்தறிவின் மூலம் தான் இதைச் சரி செய்ய முடியும்.

நம் அணுகுமுறையில் மிகப்பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. பிறருக்கு சாதி என்பது கருத்தியல் சார்ந்த விசயமாக இருக்கும் அதே சமயம், தலித்துகளைப் பொறுத் தவரை அவர்களை எல்லா வகை யிலும் தாக்கும் பௌதீக விசை யாக சாதி உள்ளது. சாதி பற்றி அடிப்படையான விசயங்களைப் பகுத்தறிவின் பரப்பில் நின்று விவாதிக்க வேண்டியுள்ளது. பகுத்தறிவு இல்லாத எதையும் ஏற்கக்கூடாது. சாதியை அறிவுப் பூர்வமாக தொல்லைப்படுத்தும் விவாதம் எதுவும் கல்வியில் இல்லை. இப்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை கூட சாதி குறித்துப் பேசவில்லை. இவ்வாறு ச.தமிழ்ச் செல்வன் கூறினார். இதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற பலரும் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்கள் குறித்து தமிழ்ச்செல்வன் பதில் அளித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.