tamilnadu

img

பழுதடைந்த சாலையை சீரமைத்திடுக

எஸ்.செந்தில்குமார் எம்.பி., வலியுறுத்தல்

தருமபுரி, செப்.28- அரூர்-சேலம் சாலை பழுதடைந்துள்ளதை தருமபுரி நாடாளுமன்ற  உறுப்பினர் டிஎன்வி எஸ். செந்தில்குமார் சனியன்று  நேரில் ஆய்வு மேற் கொண்டு, அதனை செப் பனிட வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்,   அரூரியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் வந்தனர். இதையறிந்த, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், தேசிய நெடுஞ்சாலை அதி காரிகளுடன் சாமியாபுரம் கூட்டுச் சாலை பகுதியில் பழுதடைந்த சாலையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சுமார் ஒரு  அடி ஆழம் 10 அடி அகலத்துக்கு ஆங்காங்கே  குழிகள் இருப்பது தெரிய வந்தது.  இதைத்தொடர்ந்து, அரூர்-சேலம் நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும், இச்சாலை நிகழாண்டு பிப்ரவரி மாதம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வரும் அக்.2 -ஆம் தேதி இச்சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதையடுத்து, அரூர்-சேலம் சாலை விரைந்து சீரமைக்கப்படும் என்ற வாக் குறுதியை அப்பகுதி மக்களிடம் எடுத்து ரைத்தார்.