திருப்பூர், அக். 11 - திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பீஸ்ரேட், டைம்ரேட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான போனஸ் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் என்.சேகர், ஜெகநாதன், பி.ஆர்.நட ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பின்னலாடை நிறுவனங்கள் தாம திக்காமல் உடனடியாக போனஸ் தொகை வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.