அவிநாசி, பிப். 7- பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் வலியு றுத்தினார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன் றியக் குழுத் தலைவர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் அரிஹரன், வட்டார வளர்த்தி அலுவலர் (ஊராட்சி) சாந்தி லட்சுமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவகாமி சுப்பிரமணியம், ஒன்றியத் துணைத் தலைவர் பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துசாமி பேசு கையில், கணியாம்பூண்டி பகுதிக்கு ஆற்றுக் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். புதுப்பா ளையம் ஊராட்சிக்கு எல்என்டி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத் தினார். மேலும், உள்ளாட்சி தேர்தல் பணிக்கான செலவினங்களை ஒன்றிய பொதுநிதியில் எடுக்க ஆட்சேபணை தெரிவித்தார். மேலும் செலவு விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்குப் பதிலளித்த ஒன்றிய ஆணையாளர், தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை விட கூடுதலான செலவுகளை மட்டுமே எடுக்கவுள்ளோம். அதி லும் தேர்தல் ஆணையம் திருப்பித் தந்தவுடன் சரிகட்டப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய சேதுமாதன்(திமுக), 40ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பழங்கரை ஊராட்சியில் 1.20 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்தும் இதுவரை ஆரம்பசுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், அவிநாசிலிங்கம்பா ளையத்தில் எப்போது வேண்டுமா னலும் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். தொடர் போராட்டத்திற்கு உரிய ரங்காநகர் சின்னேரிபாளையம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனப்பல உறுப்பினர்க ளும் கோரிக்கை வைத்தனர்.