தாராபுரம், ஜூன் 25- தாராபுரம் அருகே நான்குவழிச்சாலை பணிக் காக மின் கம்பம் அகற்றிய போது, மின்கம்பம் சாய்ந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார். மற்றொரு தொழிலாளி படுகாயம டைந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளை யத்திலிருந்து ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. தனியார் கட்டுமான நிறுவனம் இப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரு கிறது. இந்நிலையில் தாராபுரம் புற வழிச் சாலையிலுள்ள மின் கம்பங்களை அகற்றி தள்ளி நடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் கட்டுமான தொழிலாளர்கள் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். ஒரு மின்கம்பத்தை கயிறு கட்டி இழுத்தபோது 3 மின்கம்பங்கள் அடுத் தடுத்து சாய்ந்தது. இதில் ஒரு மின்கம்பத் திற்கு அருகில் நின்று பணியாற்றிக் கொண் டிருந்த விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூரை சேர்ந்த ஜெயபால் மகன் கோபால் (25) மின்கம்பம் தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ராஜ பாளையம் மொரப்பூரை சேர்ந்த இசக்கி முத்து (27) படுகாயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்றும், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்தை மின்வாரிய உதவி கோட்டப்பொறியாளர் ரணதிவே, உதவி பொறியாளர் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சக தொழிலாளி சதீஸ் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து 13 பேர் கட்டுமான நிறுவனம் சார்பில் தேர்வு செய் யப்பட்டு, ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 11 நாட்களாக பணிபுரிந்து வரு கிறோம். கண்முன்னே என் உறவினர் இறந்தது அதிர்ச்சியாக உள்ளது. அவரது குடும்பத்திற்கு கட்டுமான நிறுவனத்தினர் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்ப வத்தால் புற வழிச்சாலையில் போக்கு வரத்து அரைமணிநேரம் பாதிக்கப்பட்டது.