tamilnadu

img

வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்க

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

சேலம், நவ.15- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணையை (எண்.56) ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  மக்கள் சந்திப்பு பிரச்சார  இயக்கத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசா ணையை (எண்.56) ரத்து செய்ய வேண்டும்.  4.5 லட்சம் காலிப் பணியிடங்கனை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகத்தில் ஐந்து முனை களில் இருந்து ஊழியர்- மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதன்ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் பிரச்சார இயக்கம் துவங்கியது.அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமான் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  சங்கத்தின் மாநில துணைத் தலை வர் சீனிவாசன்,சிஐடியு நிர்வாகி சீ. கருப்பண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மேட்டூர் செய லாளர் எஸ்.எம். தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சேலம் மாநகரம்

சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற  பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட  துணைத்தலைவர் ந.திருவேரங்கன் தலைமை தாங்கினார். வருவாய்  துறை அலுவலர் சங்க நிர்வாகி  ஜீவானந்தம் வரவேற்புரை யாற்றினார். இதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் சுப்பிரமணியம், மாநில செய லாளர் எம்.முருகேசன், வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி வி. அர்த்தனாரி ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். அரசு ஊழியர் சங்க  மாநில துணைத் தலைவர் சீனி வாசன் சிறப்புரை ஆற்றினார். சேலம் வட்ட கிளை சார்பாக  எஸ். முகமது கரீம் நன்றி கூறினார்.

 ஓமலூர் 

ஓமலூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் என். திருநாவுக் கரசு வரவேற்புரை வழங்கினார்.  இதில் மாநிலச் செயலாளர் பர மேஸ்வரி சிறப்புரையாற்றினார். கோவிந்தராஜ்  வாழ்த்துரை வழங்கி னார். அரசு ஊழியர் சங்க ஓமலூர் நிர்வாகி கலைவாணன் அந்தோணி நன்றி கூறினார். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முத்துக்குமரன் தலைமை தாங்கி னார். இதேபோல் வாழப்பாடி பகுதியில் மாவட்ட பொருளாளர் செல்வம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் எம்.ராணி வர வேற்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் சண்முகம் நன்றி  கூறினார். இதையடுத்து  ஆத்தூரில்  பழைய பேருந்து நிலையம்  அருகில்  பொதுக்கூட்டம்  நடை பெற்றது. இதில் தமிழ்நாடுஅரசு  ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து  கொண்டனர்.