tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடுக

அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, நவ.5- மத்திய பாஜக மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என அனைத்து தொழிற் சங்கங்களில் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் 8 மாவட்டங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங் கேற்ற மண்டல மாநாடு செவ்வா யன்று நடைபெற்றது. இதில்  ஏஐடியுசி மாநிலப் பொதுச்செய லாளர் டி.எம்.மூர்த்தி, சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, ஐஎன்டியுசி மாநி லச் செயலாளர் வி.ஆர்.பாலசுந் தரம், எச்எம்எஸ் மாநிலச் செயலா ளர் டி.எஸ்.ராஜாமணி மற்றும்  கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தரும புரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில் மத்திய பாஜக மோடி அரசின் மக்கள், தொழி லாளர் விரோத நடவடிக்கை களைக் கண்டித்தும், தொழிலா ளர்கள் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புகளாகச் சுருக்கி தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதைக் கைவிட வேண்டும்.  தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.21 ஆயிர மாக உயர்த்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியா ருக்கு விற்பதை கைவிட வேண் டும். வேலை வாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். நிரந்தரத் தன்மை உள்ள தொழில்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை கைவிட வேண்டும்.  அமைப்பு சாராத் தொழிலாளர் களுக்கு தேசிய நிதியை உரு வாக்கி சமூகப் பாதுகாப்புத் திட் டங்களை செயல்படுத்த வேண் டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங் களை முடக்கும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2020 ஆம்  ஆண்டு  ஜனவரி 8 ஆம் தேதி யன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமி ழகத்தில் வெற்றி பெறச்செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.