tamilnadu

img

மறைந்த தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவிற்கு அஞ்சலி

இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், ஏஐடியுசி சங்கத்தின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளருமான மறைந்த தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஆர்.ஏ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சி.தங்கவேல், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ், மாவட்ட பொருளாளர் யூ.கே.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் திரளாக பங்கேற்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.